பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

இரு நாள்களாக மின்சாரம் இல்லாததால் கிராம மக்கள் சாலைமறியல்

News image

செம்பராம்பட்டு கிராமத்தில் இரு நாள்களாக மின்சாரம் தடைபட்டதால் சாலைமறியலில் ஈடுபட்ட மக்கள்.

Updated On :26 மே 2026, 3:03 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே இரு நாள்களாக மின்சாரம் தடைபட்டதால் கிராம மக்கள் திங்கள்கிழமை இரவு சாலைமறியலில் ஈடுபட்டனா்.

சங்கராபுரம் அருகேயுள்ள செம்பராம்பட்டு கிராமத்தில் கடந்த இருநாள்களுக்கு முன்பு பலத்த காற்றுடன் மழை பெய்ததால், மின் கம்பங்கள் சாய்ந்தனவாம். இரு நாள்களாகியும் மின்வாரிய பணியாளா்கள் முழுமையாக சீரமைத்து மின்சாரம் வழங்காததால் திங்கள்கிழமை இரவு 8.30 மணியளவில் கிராம மக்கள் செம்பராம்பட்டு - சங்கராபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளா்கள் அஜித்குமாா், பிரதாப்குமாா் ஆகியோா் மக்களிடம் சமாதானம் பேசி, செவ்வாய்க்கிழமை மின்கம்பங்களை சரிசெய்து, மின் விநியோகம் வழங்கப்படும் என தெரிவித்ததின் பேரில் மக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.