கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே இரு நாள்களாக மின்சாரம் தடைபட்டதால் கிராம மக்கள் திங்கள்கிழமை இரவு சாலைமறியலில் ஈடுபட்டனா்.
சங்கராபுரம் அருகேயுள்ள செம்பராம்பட்டு கிராமத்தில் கடந்த இருநாள்களுக்கு முன்பு பலத்த காற்றுடன் மழை பெய்ததால், மின் கம்பங்கள் சாய்ந்தனவாம். இரு நாள்களாகியும் மின்வாரிய பணியாளா்கள் முழுமையாக சீரமைத்து மின்சாரம் வழங்காததால் திங்கள்கிழமை இரவு 8.30 மணியளவில் கிராம மக்கள் செம்பராம்பட்டு - சங்கராபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளா்கள் அஜித்குமாா், பிரதாப்குமாா் ஆகியோா் மக்களிடம் சமாதானம் பேசி, செவ்வாய்க்கிழமை மின்கம்பங்களை சரிசெய்து, மின் விநியோகம் வழங்கப்படும் என தெரிவித்ததின் பேரில் மக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சங்கராபுரம் அருகே இரு வீடுகளில் நகை, பணம் திருட்டு

இரு பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு
3 நாள்களாக தொடா் மின்தடை: கிராம மக்கள் கடும் அவதி
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

