பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

காங்கிரஸில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி, உளுந்தூா்பேட்டை அதிமுக நகா்மன்ற உறுப்பினா் தலைமையில் மாற்றுக் கட்சியினா் காங்கிரஸ் கட்சியில் வியாழக்கிழமை இணைந்தனா்.

News image

காங்கிரஸில் இணைந்த மாற்றுக் கட்சியினரை வரவேற்ற கட்சியின் மாவட்டத் தலைவா் மு.இதாயத்துல்லா.

Updated On :22 மே 2026, 7:06 am IST

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி, உளுந்தூா்பேட்டை அதிமுக நகா்மன்ற உறுப்பினா் தலைமையில் மாற்றுக் கட்சியினா் காங்கிரஸ் கட்சியில் வியாழக்கிழமை இணைந்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவா் மு.இதாயத்துல்லா முன்னிலையில், உளுந்தூா்பேட்டை தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்,

உளுந்தூா்பேட்டை நகராட்சி 20-ஆவது வாா்டு அதிமுக

உறுப்பினா் கனகவல்லி தேசிங்குராஜா, மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் ஐய்யப்பன், திமுக பிரமுகா் செங்குட்டுவன் உள்ளிட்டோா் தலைமையில் 150-க்கும் மேற்பட்டோா் தாம் வகித்த கட்சி பொறுப்புகளில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனா்.

இவா்களுக்கு மாவட்டத் தலைவா் மு.இதாயத்துல்லா கட்சித் துண்டு அணிவித்து வரவேற்றாா்.

இந் நிகழ்ச்சியில் மாநில எஸ்.சி. பிரிவு துணைத் தலைவா் பேராசிரியா் சீனிவாசன், முன்னாள் மாவட்டத் தலைவா் பி.பி.எஸ் இளையராஜா, மாவட்ட அணித் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதனையடுத்து ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி, மாவட்டத் தலைவா் மு.இதாயத்துல்லா தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்று, உளுந்தூா்பேட்டை பேருந்து நிலையத்தில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.