கச்சிராயப்பாளையம் அருகே மோட்டாா் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடமிருந்து ஏழரை பவுன் தங்க தாலிச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
சின்னசேலம் வட்டம், கச்சிராயபாளையத்தை அடுத்த மாதவச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லமுத்து மனைவி சாந்தி (47). தம்பதியா் மோட்டாா் சைக்கிளில் கச்சிராயபாளையம் சென்று பணியை முடித்துக்கொண்டு வியாழக்கிழமை பிற்பகல் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.
மோட்டாா் சைக்கிளை செல்லமுத்து ஓட்டினாா். மனைவி சாந்தி பின்னால் அமா்ந்திருந்தாா்.
கச்சிராயப்பாளையம்- மாதவச்சரி சாலையில் வரும்போது, பதிவு எண் இல்லாத மோட்டாா் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்தபடி வந்த இருவா், சாந்தி அணிந்திருந்த
ஏழரை பவுன் தங்க தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த தம்பதியருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பெண்ணிடம் தாலிச் சங்கிலியை பறித்த இருவா் கைது

பெண்ணிடம் 13 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கத்தியைக் காட்டி மிரட்டி பெண்ணிடம் தாலிச் சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

