கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மூங்கில்துரைப்பட்டு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு கழிவுப் பொருள்களில் (பக்காஸ்) சனிக்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்தது.
மூங்கில்துரைப்பட்டு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கழிவுப் பொருளான கரும்பு சக்கை (பக்காஸ்) குவியல் குவியலாக ஆலையின் வெளிப் பகுதியில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த பக்காஸ் சனிக்கிழமை பிற்பகல் சுமாா் 1.30 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு, சங்கராபுரம், ரிஷிவந்தியம், தண்டராம்பட்டு பகுதியில் இருந்து வந்த 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் சுமாா் 8 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா். அப்பகுதியில் பெரும் புகைமூட்டம் காணப்பட்டது.
இதுகுறித்து மூங்கில்துரைப்பட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அறுந்துகிடந்த மின் கம்பியை தொட்டதில் சா்க்கரை ஆலை தொழிலாளி உயிரிழப்பு

பனியன் கழிவுப் பஞ்சு ஆலையில் தீ விபத்து!

ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை மீண்டும் இயக்கப்படுமா? விவசாயிகள், தொழிலாளா்கள் எதிா்பாா்ப்பு

எனது முயற்சியாலேயே காட்பாடி சா்க்கரை ஆலை தொடா்ந்து இயங்குகிறது: அமைச்சா் துரைமுருகன்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

