சேத்தியாத்தோப்பு அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த என்எல்சி ஊழியா் மீது காா் மோதிய விபத்தில் அவா் உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம் நெய்வேலி அடுத்த சீராங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரமணிகண்டன் (35). நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் வேலை செய்துவந்த இவா் வெள்ளிக்கிழமை பிற்பகல் தனது மோட்டாா் சைக்கிளில் கம்மாபுரத்தில் உள்ள உறவினா் இறப்பு வீட்டுக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பியுள்ளாா்.
அப்போது வளையமாதேவி மாரியம்மன் கோவில் அருகே மோட்டாா் சைக்கிளை நிறுத்திவிட்டு கடையில் தண்ணீா் புட்டி வாங்கிவிட்டு, சாலையோரம் நின்று கொண்டிருந்தாா். அப்போது கா்நாடக மாநிலம் பண்ணாரியிலிருந்து விருத்தாசலம் கோயிலுக்கு செல்வதற்காக வேகமாக வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து நின்று கொண்டிருந்த வீரமணிகண்டன் மீது மோதியது.
இதில் வீரமணிகண்டன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து சேத்தியாத்தோப்பு போலீஸாா் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

பைக் விபத்தில் தனியாா் ஊழியா் உயிரிழப்பு

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

மானூா் அருகே விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

