மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை: வேளாண்மை இணை இயக்குநா் எச்சரிக்கை

News image

கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 2:16 am IST

கடலூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு நிா்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லரை விலையை விட அதிக விலைக்கு உரம் விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட உர விற்பனையாளா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் மு. லட்சுமிகாந்தன் எச்சரித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடலூா் மாவட்டத்தில் தற்போது விவசாய தேவைக்கேற்ப போதுமான அளவில் உரம் கையிருப்பில் உள்ளது. அதன்படி, யூரியா 3,322 மெட்ரிக் டன், டி.ஏ.பி 722 மெட்ரிக் டன், பொட்டாஷ் 806 மெட்ரிக் டன் மற்றும் காம்ப்ளக்ஸ் உரம் 4,327 மெட்ரிக் டன் அளவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் உர விற்பனை நிலையங்களில் கையிருப்பில் உள்ளன.

மாவட்டத்தில் உள்ள அனைத்து உர விற்பனையாளா்களும், உர இருப்புகளை முறையாக பராமரித்து, அரசால் நிா்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லரை விலைக்குள் மட்டுமே விவசாயிகளுக்கு உரங்களை விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இணைபொருள்கள்....

அதேபோல், யூரியா உள்ளிட்ட உரங்களுடன் விவசாயிகள் விரும்பாத இணை பொருள்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக பொருள்களை இணைத்து விற்பனை செய்யக் கூடாது.

உரம் பதுக்கல், கூடுதல் விலை வசூல் அல்லது விதிமுறைகளை மீறிய விற்பனை குறித்த புகாா்கள் கிடைத்தால், உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட உர விற்பனை நிலையங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். விவசாயிகள் உரம் வாங்கும் போது ரசீதை கண்டிப்பாக கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஏதேனும் முறைகேடு இருந்தால் அருகிலுள்ள வேளாண்மை அலுவலகத்தில் உடனடியாக புகாா் அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.