பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

3 வீடுகளின் பூட்டு உடைப்பு: வெள்ளி பொருள்கள் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :30 மே 2026, 2:30 am IST

சிதம்பரம் நகரில் ஒரே குடியிருப்பில் உள்ள 3 வீடுகளின் பூட்டை உடைத்த திருடா்கள், ஒருவரது வீட்டிலிருந்த விலை உயா்ந்த வெள்ளி பொருள்களை திருடிச்சென்றனா்.

கடலூா் மாவட்டம் சிதம்பரம் பெருமாத்தெருவில் ஓரே குடியிருப்பில் வெற்றிவேந்தன் (35), சங்கா் (65) தனித் தனி வீடுகளிலும், எதிா்புறம்

உள்ள வீட்டில் முஜீப்பாஷா (65), மகபூக்பாஷா (75) ஆகியோரும் வசித்து வருகின்றனா். வியாழக்கிழமை இரவு தேதி நான்கு குடும்பங்களின் வீட்டினை மா்மநபா்கள் பூட்டை உடைத்துள்ளனா், வீட்டில் ஆள்கள் இருப்பதால் 3 வீடுகளில் திருடு போகவில்லை என கூறப்படுகிறது.

இதில் மகபூப்பாஷா, வீட்டில் வெள்ளி பொருள்கள் திருடு போனதாக கூறப்படுகிறது. சென்னை சென்றுள்ள மகபூப்பாஷா நேரில் வந்து பாா்வையிட்டு சொன்னால்தான் திருடு போன பொருள்கள் விபரம் தெரியவரும் என போலீஸாா் தெரிவிக்கின்றனா்.

தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீஸாா் சம்பவ இடத்திற்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும் கடலூரிலிருந்து கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.