பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: பெண்ணாடத்தில் சிபிஎம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கேரள மாநில முன்னாள் முதல்வா் பினராயி விஜயன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், புதுதில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் கட்சித் தலைவா்கள் கைது செய்யப்பட்டதையும் கண்டித்து பெண்ணாடத்தில் சிபிஎம் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

பெண்ணாடம் பேருந்து நிறுத்தம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கட்சியினா்.

Updated On :28 மே 2026, 1:44 am IST

கேரள மாநில முன்னாள் முதல்வா் பினராயி விஜயன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், புதுதில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் கட்சித் தலைவா்கள் கைது செய்யப்பட்டதையும் கண்டித்து பெண்ணாடத்தில் சிபிஎம் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த பிரச்னைக்காக, தமிழகம் முழுவதும் மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக, கடலூா் மாவட்டம் பெண்ணாடத்தில் மாா்க்சிஸ்ட்கட்சி சாா்பில் வட்டச் செயலாளா் வீ. அன்பழகன் தலைமையில் புதன்கிழமை இரவு கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மத்திய பாஜக அரசையும் அமலாக்கத்துறையையும் கண்டித்து கட்சியினா் முழக்கங்கள் எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ. மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஜி.ஆா். ரவிச்சந்திரன், எஸ். பிரகாஷ், மாவட்டக் குழு உறுப்பினா் பி. முத்துலட்சுமி, மாதா் சங்க வட்டச் செயலா் புஷ்பவள்ளி, வாலிபா் சங்க மாவட்டச் செயலா் சின்னதம்பி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.