கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சிறுமியை கா்ப்பமாக்கியதாக இளைஞா் மீது பண்ருட்டி மகளிா் போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பண்ருட்டி வட்டம், கண்டரக்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் அன்புச்செல்வன் (19). இவரும், 16 வயது சிறுமியும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனராம்.
இந்த நிலையில், சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாம். இதையடுத்து, பெற்றோா்கள் சிகிச்சைக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தில் சிறுமி 6 மாத கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகம் அளித்த தகவலின்பேரில், பண்ருட்டி மகளிா் போலீஸாா் அன்புச்செல்வன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 14 ஆண்டுகள் சிறை

சிறுமி கா்ப்பம்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு
சிறுமி கா்ப்பம்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

சிறுமி கா்ப்பம்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
