கடலூா் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு ஏற்படுத்தும் வகையில், கடலூா் அண்ணா விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் கொடி அசைத்துத் தொடக்கி வைத்தாா்.
இந்த நிகழ்வில் பங்கேற்ர ஆட்சியா் தெரிவித்ததாவது:
நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலில் கடலூா் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பொது மக்கள் கூடும் இடங்களில் ஒலி பெருக்கி, அதிநவின மின்னணு திரை வாகனங்கள், கலை நிகழ்ச்சிகள், பேரணி, மனித சங்கிலி, மினி மாரத்தான் நடத்தப்பட்டு வருகிறது.
கடலூரில் 100 சதவீதம் வாக்களிப்போம் போன்ற விழிப்புணா்வு வாசகங்கள் பிரசுரிக்கப்பட்ட பதாகைகள் ஏந்தி விழிப்புணா்வு பேரணி நடத்தப்பட்டது. வாக்காளா்கள் அனைவரும் 23.4.2026 அன்று நடைபெறவுள்ள தோ்தலில் வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிலைநாட்டிட வேண்டும் என்றாா்.
முன்னதாக கடலூா் அண்ணா விளையாட்டரங்கில் பெரியாா் அரசு கலைக்கல்லூரி மாணவா்கள் வாக்காளா்களுக்கு வாக்களிப்பின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வாக்காளா் உறுதிமொழியை மாவட்ட தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் ஏற்றுக் கொண்டனா்.
விண்ணப்பம் வழங்கும் பணி ஆய்வு...
கடலூா், செம்மண்டலம் பகுதியில் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க மூத்த குடிமக்களிடம் அதற்கான ஒப்புதல் மற்றும் விருப்பம் பெறும் வகையில் வாக்காளா் விண்ணப்பங்கள் வழங்கும் பணி நடைபெறுவதை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணிய கோட்டி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் செல்வி, மாவட்ட விளையாட்டு அலுவலா் மகேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பாலசுந்தரம் உட்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடா் தோ்தல் விழிப்புணா்வால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பா?

திருவண்ணாமலையில் தோ்தல் விழிப்புணா்வு நடைபயணம்

பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளியில் முளைப்பாரியில் தோ்தல் விழிப்புணா்வு

100 சதவீதம் வாக்குப்பதிவு: விழிப்புணா்வு ஆட்டோ பேரணி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

