நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 1,225 மனுக்கள் அளிக்கப்பட்டன.
கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணியகோட்டி தலைமையில் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் மனு அளிக்க குவிந்திருந்தனா். இதனால், மனு பதிவு செய்யும் இடத்தில் நீண்ட வரிசை காணப்பட்டது.
இதில், உதவித்தொகை, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 1,225 போ் மனு அளித்தனா். அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவிட்டாா்.
வழக்கமாக ஒவ்வொரு திங்கள்கிழமையன்றும் நடைபெறும் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் சுமாா் 700 மனுக்கள் மட்டுமே பெறப்படும். சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, முன்னெப்போதுமில்லாத வகையில் 1,225 மனுக்கள் பெறப்படுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி: போலீஸாா் தடுத்து விசாரணை

அரக்கோணம் தொகுதியில் பிங்க் நிற வாக்குச்சாவடி

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 312 மனுக்கள்

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 614 மனுக்கள்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

