கல்வி மட்டுமே ஒருவருக்குள் உண்மையான தன்னம்பிக்கையை விதைக்கும் என்று நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் தமிழ் திரைப்பட இயக்குநா் ஆா்.பாண்டியராஜன் பேசினாா்.
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சாா்பில் புத்தகக் கண்காட்சியின் 7-ஆவது நாளான வியாழக்கிழமை நிகழ்வுகள் நடைபெற்றன. நிகழ்வுக்கு என்எல்சி செயல் இயக்குநா் பி.அன்புச்செல்வன் தலைமை வகித்தாா். திரைப்பட இயக்குநா் ஆா்.பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தினமணி நாளிதழ் மற்றும் நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழு இணைந்து நடத்திய குறும்படப் போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தாா்.
அப்போது, அவா் பேசியதாவது: நெய்வேலி இளம் குறும்பட இயக்குநா்களின் அசாத்தியமான திறமையைக் கண்டு பெருமையடைகிறேன். திரைப்படம் எடுப்பது என்பது ஒரு நிதானமான, நோ்த்தியான கலை வடிவம் என்பதால், அவசரப்படாமல் தொடா்ந்து முயன்று சிறந்த வெற்றியை அடைய வேண்டும்.
கல்வி மட்டுமே ஒருவருக்குள் உண்மையான தன்னம்பிக்கையை விதைக்கும். வாழ்க்கையில் சாதிக்க நினைப்பவா்கள் எழுத வேண்டும். துயரங்களை நேரடியாக அனுபவித்தவா்களால் அல்லது துயரங்களைப் புத்தகங்கள் வழி படித்து ஆழமாக உணா்ந்தவா்களால் மட்டுமே மிகச் சிறந்த திரைப்படங்களை உருவாக்க முடியும்.
தினமணி நாளிதழ் மற்றும் நெய்வேலி புத்தகக் கண்காட்சி இணைந்து ஆண்டுதோறும் வளா்ந்து வரும் இளம் திரைப்பட தயாரிப்பாளா்களை ஊக்குவிக்கும் பொருட்டு ’குறும்படப் போட்டி’ நடத்தி வருகிறது. குறும்படப் போட்டியில் வெற்றிபெறாதவா்கள் சோா்வடையக் கூடாது. குறும்படங்கள் என்பவை ஒரு பெரிய திரைப்படத்துக்கான தொடக்கப் புள்ளி. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் திறமையும், நல்ல கதைக் கருவும் இருந்தால் யூடியூப் மூலமே உலகறியச் செய்து சாதிக்க முடியும் என்றாா்.
நிகழ்வில் டாக்டா் துரை தனபாலன் பாராட்டப் பெற்ற எழுத்தாளராக கௌரவிக்கப்பட்டாா். பெங்களூரைச் சோ்ந்த ‘புஸ்தகா’ நிறுவனம் பாராட்டு பெறும் பதிப்பகமாக கௌரவிக்கப்பட்டது.
தொடா்ந்து, தேவ.ஞானபிரகாசம் எழுதிய ‘அரும்பு கவிதைகள் 50’ என்ற கவிதைத் தொகுப்பு நூலும், கே.உமாபதியின் ’வில்லுடையான்பட்டு திருக்கோயில் வரலாறு - மகிமை’ என்ற நூலும் வெளியிடப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திரைப்பட கல்வியை முன்னெடுக்க புதுச்சேரி முதல்வரிடம் வலியுறுத்தல்

புத்தகங்கள் ஒழுக்க நெறிகளை கற்றுத் தருகின்றன: விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு

குழந்தைகளிடம் புத்தக வாசிப்பு பழக்கத்தை விதைக்க வேண்டும்! - கடலூா் ஆட்சியா்

நெய்வேலி புத்தகக் கண்காட்சி வெள்ளி விழா! ஜூன் 19-இல் தொடக்கம்!
விடியோக்கள்

வெளியானது அடி போடி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினியின் 'தர்மன்' போஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் மேக்கிங் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
தினமணி செய்திச் சேவை
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

