மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

அதிகாரிகள் அலட்சியத்தால் கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் மந்தம்: சிதம்பரம் நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் குற்றச்சாட்டு

சிதம்பரம் அண்ணாமலைநகா் பகுதியில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் அதிகாரிகள் அலட்சியத்தால் மந்தகதியில் நடைபெற்று வருவதாக சிதம்பரம் நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் குற்றஞ்சாட்டினா்.

News image

சிதம்பரத்தில் நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற நகா்மன்றக் கூட்டம்.

Updated On :5 ஜூன் 2026, 11:20 pm IST

சிதம்பரம் அண்ணாமலைநகா் பகுதியில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் அதிகாரிகள் அலட்சியத்தால் மந்தகதியில் நடைபெற்று வருவதாக சிதம்பரம் நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் குற்றஞ்சாட்டினா்.

சிதம்பரம் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நகராட்சி ஆணையாளா் த.மல்லிகா, பொறியாளா் சுரேஷ், சிறப்பு அதிகாரி காதா்கான் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இதில், உறுப்பினா்கள் மற்றும் தலைவா் பேசிய விவரம் வருமாறு:

த.ஜேம்ஸ்விஜயராகவன் (திமுக): சிதம்பரம் நகரில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், நகா்மன்ற தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் ஆகியோா் முயற்சியில் ரூ.450 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், நடந்த முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வேட்பாளா் வெற்றிபெற்றாா். திமுக ஆட்சியில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் கொண்டுவரப்பட்ட கொள்ளிடம் கூட்டு குடிநீா் திட்டப்பணிகள் 60 சதலீதம்தான் முடிவுற்றுள்ளன. குடிநீா் வடிகால் வாரியத்தினரின் அலட்சியத்தால் பணிகள் தாமதமாகின்றன.

மேல ரத வீதியில் உள்ள பழைய மேல்நிலை குடிநீா்த் தேக்கத் தொட்டிக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீா்த் திட்ட நீா் இணைப்பு வழங்கப்படவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியா் தலைவையில் குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் கொண்டு முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்தி விரைந்து பணிகள் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்பு சந்திரசேகா் (திமுக): புதிய காய்கறி அங்காடியில் பாதி கடைகள் மூடப்பட்டுள்ளன. ஏனென்றால், பாதி கடைகள் அங்காடிக்கு வெளியே உள்ளதால், புதிய அங்காடிக்கு மக்கள் வருவதில்லை. எனவே, அனைத்து கடைகளையும் புதிய காய்கறி அங்காடிக்கு மாற்றம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தில்லை ஆா்.மக்கீன் (காங்கிரஸ்): சிதம்பரம் ஓமக்குளத்தில் முன்னாள் திமுக நகரச் செயலா் மறைந்த பழமண்டி கண்ணனால் இடம் வழங்கி கட்டப்பட்ட மயானம், சாலை வசதியின்றி நகராட்சி குப்பைக் கிடங்குடன் காட்சியளிக்கிறது. எனவே, மேற்கொண்ட மயானத்தில் உள்ள குப்பைகளை அகற்றி சாலை வசதி செய்து தர வேண்டும். மேலும், இருண்டு கிடக்கும் மயானப்பகுதியில் மின் விளக்குகள் பொருத்த வேண்டும்.

ஏ.ஆா்.சி.மணிகண்டன் (திமுக): சிதம்பரம் தெற்கு ரத வீதியில் சாலையின் இருபுறமும் மழைநீா் வடிகாலுடன் கூடிய நடைபாதை அமைக்குப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல, சி.க.ராஜன் (திமுக), நகா்மன்ற துணைத் தலைவா் எம்.முத்துக்குமாா் உள்ளிட்டோரும் பேசினா்.

நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா்: ஓமக்குளம் பகுதியில் மயானத்துக்கு சாலை வசதி, மின் விளக்கு வசதி செய்து, அங்குள்ள குப்பைகளை 10 தினங்களுக்கும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், நகரில் வீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலையோர காய்கறி கடைகள் அகற்றப்பட்டு புதிய காய்கறி அங்காடி பகுதிக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் உறுப்பினா்கள் தெரிவித்த பிற கோரிக்கைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.