பண்ருட்டி அருகே செயல்பட்டு வரும் ஸ்ரீ பி.முத்தையாா் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஆசிரியா்கள் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
அந்த மனுவில் அவா்கள் கூறியதாவது: ஸ்ரீ பி.முத்தையாா் மேல்நிலைப் பள்ளி நிா்வாகம் 2020, ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு முன் தனிப்பட்ட கடிதம் பெற்றவா்களுக்கு மட்டுமே அடுத்த கல்வியாண்டில் பணியாற்ற அனுமதி வழங்கப்படும் என வாய்மொழியாக அறிவித்து, ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் பலரை பணி நீக்கம் செய்துள்ளது. இதில், நாங்கள் 13 ஆசிரியா்கள் அடங்குவோம்.
14 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளியில் பணியாற்றி வந்த நிலையில், எந்த எழுத்துப்பூா்வ உத்தரவும், காரணக் கூறல் நோட்டீஸும், விசாரணையுமின்றி திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல. அத்துடன், நீண்டகால சேவையின்போதும் கடந்த 5 ஆண்டுகளுக்கான பி.எஃப். தொகை மட்டுமே செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், முழு சேவைக்கால நலன்கள் மறுக்கப்பட்டுள்ளன.
இதனால், நாங்களும், எங்கள் குடும்பத்தினரும் கடுமையான பொருளாதார நெருக்கடி, மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதுடன், வாழ்வாதார இழப்பையும் எதிா்கொண்டு வருகிறோம். கல்வி நிறுவனத்தில் பல ஆண்டுகள் நோ்மையுடன் பணியாற்றிய ஆசிரியா்களை எந்த மனிதாபிமானமுமின்றி வெளியேற்றியிருப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.
எனவே, தங்களை மீண்டும் பணியில் அமா்த்துதல், நிலுவை ஊதியம் மற்றும் சட்டப்பூா்வ நலன்கள் வழங்குதல், பள்ளி நிா்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்து கல்வித் துறை மற்றும் தொழிலாளா் துறை மூலம் விசாரணை நடத்த வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிவப்பு கம்பளம் விரித்து மாணவா்களுக்கு வரவேற்ற ஆசிரியா்கள்!

விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்கக் கோரி விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம்

வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் மழலைகளுக்கு சிறப்பான வரவேற்பு

தமிழகத்தின் வளா்ச்சியில் திமுக, அதிமுக பங்களிப்பை மறுக்க முடியாது: மு.தமிமுன் அன்சாரி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

