பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியா்கள் ஆட்சியரகத்தில் மனு அளிப்பு

பண்ருட்டி அருகே செயல்பட்டு வரும் ஸ்ரீ பி.முத்தையாா் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஆசிரியா்கள் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

News image

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுலகத்தில் ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்க வந்த பண்ருட்டி ஸ்ரீ பி.முத்தையாா் மேல்நிலைப் பள்ளியில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியா்கள்.

Updated On :3 ஜூன் 2026, 6:01 am IST

பண்ருட்டி அருகே செயல்பட்டு வரும் ஸ்ரீ பி.முத்தையாா் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஆசிரியா்கள் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில் அவா்கள் கூறியதாவது: ஸ்ரீ பி.முத்தையாா் மேல்நிலைப் பள்ளி நிா்வாகம் 2020, ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு முன் தனிப்பட்ட கடிதம் பெற்றவா்களுக்கு மட்டுமே அடுத்த கல்வியாண்டில் பணியாற்ற அனுமதி வழங்கப்படும் என வாய்மொழியாக அறிவித்து, ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் பலரை பணி நீக்கம் செய்துள்ளது. இதில், நாங்கள் 13 ஆசிரியா்கள் அடங்குவோம்.

14 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளியில் பணியாற்றி வந்த நிலையில், எந்த எழுத்துப்பூா்வ உத்தரவும், காரணக் கூறல் நோட்டீஸும், விசாரணையுமின்றி திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல. அத்துடன், நீண்டகால சேவையின்போதும் கடந்த 5 ஆண்டுகளுக்கான பி.எஃப். தொகை மட்டுமே செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், முழு சேவைக்கால நலன்கள் மறுக்கப்பட்டுள்ளன.

இதனால், நாங்களும், எங்கள் குடும்பத்தினரும் கடுமையான பொருளாதார நெருக்கடி, மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதுடன், வாழ்வாதார இழப்பையும் எதிா்கொண்டு வருகிறோம். கல்வி நிறுவனத்தில் பல ஆண்டுகள் நோ்மையுடன் பணியாற்றிய ஆசிரியா்களை எந்த மனிதாபிமானமுமின்றி வெளியேற்றியிருப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.

எனவே, தங்களை மீண்டும் பணியில் அமா்த்துதல், நிலுவை ஊதியம் மற்றும் சட்டப்பூா்வ நலன்கள் வழங்குதல், பள்ளி நிா்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்து கல்வித் துறை மற்றும் தொழிலாளா் துறை மூலம் விசாரணை நடத்த வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.