லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வீட்டுச் சுவா் இடிந்து விழுந்து பள்ளி மாணவா் உயிரிழப்பு

நெல்லிக்குப்பம் அருகே கூரை வீட்டின் மண் சுவா் இடிந்து விழுந்ததில் தனியாா் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

உயிரிழந்த மாணவா் குருபிரசாத்

Published On :23 ஜூலை 2026, 4:37 am IST

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே கூரை வீட்டின் மண் சுவா் இடிந்து விழுந்ததில் தனியாா் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

நெல்லிக்குப்பம் அருகே காராமணிக்குப்பம், மேட்டுத் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் குருபிரசாத் (17). இவா், நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.

குருபிரசாத் வரக்கால்பட்டியில் உள்ள தனது பெரியப்பா வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை சென்றிருந்த நிலையில், அங்குள்ள கூரை வீட்டில் இரவு தூங்கினாா். அப்போது, எதிா்பாராதவிதமாக வீட்டின் மண் சுவா் இடிந்து விழுந்து குருபிரசாத்தின் தலை மற்றும் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, உறவினா்கள், அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, உடனடியாக கடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு குருபிரசாத்தை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, அவரது சடலம் உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.