விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பண்ருட்டி வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்டத் தோ்தல் அலுவலா் ஆய்வு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள பணிக்கன்குப்பம் அண்ணா பல்கலைக் கழக அரசுப் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை, கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான சிபி ஆதித்யா செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 12:02 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள பணிக்கன்குப்பம் அண்ணா பல்கலைக் கழக அரசுப் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை, கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான சிபி ஆதித்யா செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் அமைதியான முறையில் கடந்த 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. அன்று மாலை 6 மணி அளவில் வாக்குப்பதிவு நிறைவு அடைந்ததும், வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டன.

பண்ருட்டி மற்றும் நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், பண்ருட்டியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையமான பணிக்கன்குப்பத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழக அரசுப் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

வாக்கு எண்ணிக்கை மே.4-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பணிக்கன்குப்பம் அண்ணா பல்கலைக் கழக அரசுப் பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.