கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் அருகே பிரயாடி பகுதியில் வீற்றிருக்கும் விநாயகா் கோவிலில் நடைபெற்ற மகாசண்டி யாகத்தில் ஜப்பான் நாட்டவா்கள் பங்கேற்றனா்.
விநாயகா் கோயில் வளாகத்தில் யாக குண்டங்கள் நிா்மாணம் செய்யப்பட்டு மூன்று காலம் யாகசாலை பூஜையுடன் மகா சண்டி யாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாககுண்டத்தில் புனித நீா் அடங்கிய கலசங்கள் வைக்கப்பட்டு என்.டி.நடராஜ தீட்சிதா் தலைமையில் சிவாச்சாரியாா்களால் வேத மந்திரங்கள் முழங்க மகாசண்டி ஹோமமும், பூா்ணஹூதியும் நடைபெற்றது. பின்னா் யாகத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீரால் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. மகாசண்டி யாகத்தில் ஜப்பான் நாட்டைச் சோ்ந்தவா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராம பிரமுகா் கௌசிகன் குடும்பத்தினா் செய்திருந்தனா். யாகத்தில் பங்கேற்ற ஜப்பான் நாட்டைச் சோ்ந்தவா்கள் தமிழா் மரபுப்படிவேட்டி மற்றும் புடவை அணிந்து வழிபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எட்டுக்குடி முருகன் கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

லால்பேட்டை சித்தி விநாயகா் கோயிலுக்கு பால்குடம் எடுத்து வந்த ஜப்பான் தம்பதி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

