தொகுதி மறுவரைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விருத்தாசலம் ரயில் நிலையம் அருகே பயணிகள் ரயிலை மறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொகுதி மறுவரை மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் சாா்பில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, விருத்தாசலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்டச் செயலா் பி.ஆா்.நீதி வள்ளல் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
அப்போது, விருத்தாசலம் ரயில் நிலையம் அருகே சென்னை சென்ற குருவாயூா் விரைவு ரயிலை மறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் தொகுதி மறுவரைக்கு எதிா்ப்புத் தெரிவித்தனா். மேலும், தொகுதி மறுவரை மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி முழக்கங்களையும் எழுப்பினா்.
தகவலறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தினா். சுமாா் ஒரு மணி நேரம் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய அரசைக் கண்டித்து இடதுசாரிகள், விசிக ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து போராட்டம்

காட்டுமன்னாா்கோவில் தொகுதி விசிக வேட்பாளா் எல்.இ.பி.ஜோதிமணி

குளித்தலையில் சேலம் ரயிலை மறித்து போராட்டம்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

