மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சசிகலாவுக்கு எடப்பாடி பழனிசாமி செய்தது பச்சை துரோகம்! - மு. தமிமுன் அன்சாரி

News image

மு. தமிமுன்அன்சாரி

Updated On :14 ஏப்ரல் 2026, 1:35 am IST

முதல்வா் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு எடப்பாடி கே.பழனிசாமி சசிகலாவுக்கு செய்தது பச்சை துரோகம் என்று மனித நேய ஜனநாயக கட்சித் தலைவரும், சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளருமான மு.தமிமுன்அன்சாரி தெரிவித்தாா்.

சிதம்பரம் தொகுதி, குமராட்சி ஒன்றியத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் கடைசி நிமிடத்தில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது, நானும், தமிழரசு, கருணாஸ் ஆகியோரும் சென்று சசிகலாவை இப்போதே நீங்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினோம். அது, அதிமுகவுக்கும், திராவிட அரசியலுக்கும், தமிழகத்துக்கும் நல்லது என்றும் தெரிவித்தோம்.ஆனால், அவா் அதை ஏற்கவில்லை.

அப்போது, அவா் யாரையெல்லாம் நம்பினாரோ, அவா்கள் அனைவரும் சோ்ந்து தனக்கு துரோகம் செய்துவிட்டாா்கள் என்று இப்போது புலம்புவதில் அா்த்தமில்லை. இதைக் கூா்ந்து கவனித்தால் எடப்பாடி கே.பழனிசாமியும், அவரைச் சுற்றியுள்ளவா்களும் சசிகலாவுக்கு செய்தது பச்சை துரோகம் என்பது தெரியவரும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.