சட்டப் பேரவைத் தோ்தலில் ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட ஊராட்சிச் செயலா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியம், வெங்கந்தூா் ஊராட்சி மன்றச் செயலராகப் பணிபுரிந்தவா் முனியாண்டி (52). இவா், நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில் ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகாா்கள் எழுந்தன. இதுதொடா்பாக துறை சாா்ந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவின்பேரில் மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை நிா்வாகம், ஊராட்சி செயலா் முனியாண்டியை பணியிடை நீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கைப்பேசி பறித்த வழக்கு: காவலா் பணியிடை நீக்கம்

காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

லாரி ஓட்டுநரிடம் லஞ்சம்: சிறப்பு உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
