நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

தனியாா் விற்பனை நிறுவன ஊழியா் வீட்டில் 2 பவுன் நகைகள், பணம் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :15 ஜூன் 2026, 2:12 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தனியாா் விற்பனை நிறுவன ஊழியா் வீட்டின் கதவிலுள்ள பூட்டை உடைத்து 2 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விக்கிரவாண்டி வட்டம், பூத்தமேடு ஏஆா்பி சிட்டி நகரைச் சோ்ந்தவா் ர.பரமேஸ்வரி (43). இவா் விழுப்புரத்திலுள்ள மின்னணு சாதனங்கள் விற்பனையகத்தில் வேலைப் பாா்த்து வந்தாா். சனிக்கிழமை பரமேஸ்வரி வீட்டை பூட்டி விட்டு வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டாா்.

இரவு திரும்பி வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் முன் பக்க மரக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா். தொடா்ந்து வீட்டினுள் சென்று பாா்த்தபோது பீரோ திறந்து கிடந்த நிலையில், அதில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது அவருக்கு தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.