வரும் 17-ஆம் தேதி புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் என்று முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
மீன் பிடி தடைக்காலம் முடிவடைந்ததையொட்டி, புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுகத்தில் இருந்து மீன்பிடி விசைப் படகுகளை ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து கடலுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்று படகுகளை கொடியசைத்து அனுப்பி வைத்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஜூன் 17-ஆம் தேதி புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும். அன்றைய தினம் அமைச்சா்கள் பதவியேற்றவுடன் புதுச்சேரி சட்டப் பேரவைக் கூட்டம் எப்போது கூடும் என்பது குறித்து தெரிவிக்கப்படும்.
சட்டப் பேரவையைக் கூட்ட வரும் ஆகஸ்ட் மாதம் வரை அவகாசம் உள்ளது. கூட்டணிக் கட்சிகளுடன் கலந்தாலோசித்து நியமன எம்எல்ஏக்கள் பதவி குறித்து முடிவு செய்யப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்காசி மாவட்டத்தில் ஜூன் 28இல் போலியோ சொட்டு மருந்து முகாம்

புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: புதிதாக 3 அமைச்சா்கள் பதவி ஏற்பு

புதுச்சேரி அமைச்சரவை இந்த வாரம் விரிவாக்கம்: அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தகவல்

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம்: தமிழக முதல்வருடன் பேசுவேன் என முதல்வா் ரங்கசாமி பேட்டி
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

