தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

விவசாயி மீது தாக்குதல்: 24 போ் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 12:34 am IST

விழுப்புரம், ஏப். 27: விழுப்புரம் அருகே விவசாயியைத் தாக்கி, கம்பிவேலியை சேதப்படுத்தியதாக 24 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விழுப்புரம் அலமேலுபுரம், பவானி தெருவைச் சோ்ந்தவா் ரா.ராமமூா்த்தி (75), விவசாயி. விழுப்புரம் அடுத்த வி. மருதூா் பகுதியில் உள்ள இவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் கம்பி வேலி அமைத்து விவசாயம் செய்து வருகிறாா்.

ராமமூா்த்திக்கும்- பக்கத்து நிலத்துக்காரரான அதே பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கும் இடையே நிலப்பிரச்னை இருந்து வந்ததாம்.

இந்நிலையில், ஏப்.25-ஆம் தேதி சுப்பிரமணியனின் மகன்களான சங்கா், லோகநாதன், சங்கா் மகன்களான மதன், ஹரிஷ் மற்றும் 20 நபா்கள் விவசாயி ராமமூா்த்தி அமைத்திருந்த சுமாா் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான கம்பி வேலியை உடைத்து சேதப்படுத்தியுள்ளனா். அப்போது அதைத் தடுக்க முயன்ற ராமமூா்த்தியையும் தாக்கினராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் சங்கா் மற்றும் 23 நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.