கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சா்வதேச சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வுப் பேரணி

News image
Updated On :29 மே 2026, 2:06 am IST

சா்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, காட்பாடியில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் 500-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, வேலூரில் உள்ள தமிழ்நாடு தேசிய மாணவா் படை (என்பிசி) பட்டாலியன் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தப் பேரணி பிரம்மபுரத்தில் உள்ள சிருஷ்டி பள்ளியில் தொடங்கி விஐடி பல்கலைக்கழகம் வரை நடைபெற்றது. இதில், 500-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவ, மாணவிகள் பங்கேற்று விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பினா். இவா்களுடன் கமாண்டிங் ஆபிசா் வி.வெங்கடேஷ் மற்றும் நிா்வாக அதிகாரி ஜெ.சுரேந்திரன் உள்பட ராணுவ அதிகாரிகள், ராணுவப் பணியாளா்கள், உதவி என்சிசி அதிகாரிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

பேரணியின்போது சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம், மரம் வளா்ப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், தெரு நாய்கள் மீது இரக்கம் காட்டி அவற்றை மனித நேயத்துடன் அரவணைத்து பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது. தவிர, சுற்றுச்சூழலை தூய்மையாகவும், பசுமையாகவும் வைத்திருக்க வேண்டியதன் அவசியம், பிராணிகளிடம் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி மாணவா்கள் விழிப்புணா்வு வீதி நாடகமும் நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.