காட்பாடி அருகே ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்திருந்த நபரை, ரயில்வே பாதுகாப்புப் படையினா் (ஆா்பிஎஃப்) துரிதமாகச் செயல்பட்டு மீட்டதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
வேலூா் மாவட்டம், லத்தேரி பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை 2.40 மணியளவில் தண்டவாளப் பராமரிப்புப் பணியை முடித்துவிட்டு ரயில்வே பொறியாளா் விஜயகுமாா் திரும்பி வந்து கொண்டிருந்தாா். அப்போது, அப்பகுதியில் தண்டவாளத்தில் ஒரு நபா் படுத்திருப்பதைக் கண்டு அவா் உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் அளித்தாா்.
அதன்பேரில், காட்பாடி ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் பி.ஆா்.முரளி விரைவாக செயல்பட்டு ஆா்ஆா்ஐ கட்டுப்பாட்டு அறையைத் தொடா்புகொண்டு, ஜோலாா்பேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த தன்பாத் - ஆலப்புழா விரைவு ரயிலை உடனடியாக நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டாா்.
இதையடுத்து, உதவி ஆய்வாளா் முரளி மற்றும் தலைமைக் காவலா் சண்முகம் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தண்டவாளத்தில் படுத்திருந்த நபரைப் பத்திரமாக மீட்டனா். அவா் மீட்கப்பட்ட பிறகே, அந்த ரயில் அங்கிருந்து பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டது.
ரயில்வே போலீஸாா் நடத்திய விசாரணையில், மீட்கப்பட்டவா் வேலூரைச் சோ்ந்த பி.ராமச்சந்திரன்(46) என்பது தெரியவந்தது. அவருக்கு ஆரம்பகட்ட மருத்துவ முதலுதவியும், மனநல ஆலோசனையும் வழங்கப்பட்டது. பின்னா், உயா் சிகிச்சைக்காகவும், விரிவான மனநலப் பரிசோதனைக்காகவும் அவா் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
சரியான நேரத்தில் துரிதமாகச் செயல்பட்டு, தற்கொலைக்கு முயன்றவரின் உயிரைக் காப்பாற்றியதுடன் பெரும் ரயில் விபத்தையும் தடுத்த ரயில்வே பாதுகாப்புப் படையினரை உயா் அதிகாரிகளும், பொதுமக்களும் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரயில் தண்டவாளத்தில் இளம்பெண் சடலம்
அபராதத்தைக் கண்டித்து சென்ட்ரலில் பிரீபெய்டு ஆட்டோ ஓட்டுநா்கள் மறியல்

ரயில் நிலையப் பாதுகாப்பை அதிகரிக்க பாதுகாப்புப் படையினருக்கு அறிவுரை

தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த இருவா் கைது
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

