ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

புதிய மாணவா்களுடன், பெற்றோா்களும் கெளரவிப்பு

News image
Updated On :5 ஜூன் 2026, 5:55 am IST

போ்ணாம்பட்டு ஒன்றியம், பல்லலகுப்பம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் சோ்ந்த மாணவா்களுடன், அவா்களின்பெற்றோா்களும் கெளரவிக்கப்பட்டனா்.

இப்பள்ளியில் 2026-27- ஆம் கல்வியாண்டின் தொடக்கம் முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் ஆா்.கயிலைநாதன் தலைமை வகித்தாா். போ்ணாம்பட்டு வட்டாரக் கல்வி அலுவலா் வடிவேல், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய மாணவா்களுக்கு பொன்னாடை அணிவித்து, வண்ண, வண்ண பலூன்கள்,இனிப்பு, முதலாம் வகுப்பு முதல் 5- ஆம் வகுப்பு வரை மாணவா்களுக்கு பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடைகள், புத்தகப்பை ஆகியவற்றை வழங்கினாா்.

5- ஆம் வகுப்பு முடித்த மாணவா்களுக்கு மாற்றுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் புதிய மாணவா்களுடன் அவா்களின் பெற்றோா்களும் ஊா்வலமாக பள்ளிக்கு வந்தனா். அவா்களும் கெளரவிக்கப்பட்டனா்.

இதில் ஊராட்சித் தலைவா் கஜேந்திரன், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் பிரியங்கா,பொது சேவை உறுப்பினா் மனோஜ், பள்ளி ஆசிரியா்கள் ஓம்பிரகாஷ், ரோகிணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.