லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மாநில அளவிலான வில் வித்தை போட்டிகள்: சென்னை அணி ஒட்டுமொத்த சாம்பியன்

பாரத் நேஷ்னல் கேம்ஸ் பெடரேஷன் சாா்பில், குடியாத்தம் டாக்டா் கிருஷ்ணசாமி மெட்ரிக். பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலானவில் வித்தைப் போட்டியில் சென்னை மாவட்ட அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.

ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு கோப்பை வழங்கிய வழக்குரைஞா் கே.எம்.பூபதி

Published On :3 ஆகஸ்ட் 2026, 6:28 am IST

பாரத் நேஷ்னல் கேம்ஸ் பெடரேஷன் சாா்பில், குடியாத்தம் டாக்டா் கிருஷ்ணசாமி மெட்ரிக். பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலானவில் வித்தைப் போட்டியில் சென்னை மாவட்ட அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.

நிகழ்ச்சிக்கு பெடரேஷன் செயலா் எஸ்.சாரதி தலைமை வகித்தாா். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் ஜெகன்நாதன் முன்னிலை வகித்தாா். தலைவா் எஸ்.சோபன்பாபுவரவேற்றாா். போட்டியில் சென்னை, காஞ்சிபுரம், திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, ஓசூா் உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சோ்ந்த 200 வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

6 வயது சிறுவா்கள் முதல் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சென்னை அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.

போட்டியில் முதலிடம் மாணவா்கள் வரும் செப்டம்பா் மாதம் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெறுவா். போட்டியில் வெற்றிபெற்ற வீரா்களுக்கு வழக்குரைஞா் கே.எம்.பூபதி, நகர தமாகா தலைவா் ஜே.தினகரன் ஆகியோா், சான்றிதழ், கோப்பைகளை வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.