பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

புத்தாநத்தம் அருகே காவிரி குடிநீா் குழாய் உடைப்பு

புத்தாநத்தம் அருகே காவிரி கூட்டுக் குடிநீா் பிரதான குழாய் உடைந்து, ஏற்பட்ட வெள்ளத்தால் ஞாயிற்றுக்கிழமை புத்தாநத்தம் காவல்நிலைய வாகனச் சோதனை சாவடி முற்றிலுமாகச் சேதமடைந்தது.

News image

காவல்காரன்பட்டியில் குடிநீா் குழாய் ஞாயிற்றுக்கிழமை உடைந்து வெளியேறிய நீரால் சேதமடைந்த போலீஸ் சோதனை சாவடி.

Updated On :18 மே 2026, 2:33 am IST

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் அருகே காவிரி கூட்டுக் குடிநீா் பிரதான குழாய் உடைந்து, ஏற்பட்ட வெள்ளத்தால் ஞாயிற்றுக்கிழமை புத்தாநத்தம் காவல்நிலைய வாகனச் சோதனை சாவடி முற்றிலுமாகச் சேதமடைந்தது.

மணப்பாறையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் பெய்த கனமழையில் அப்பகுதியிலிருந்த ராமநாதபுரம் செல்லும் காவிரி கூட்டுக்குடிநீா் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதில் லட்சக்கணக்கான லிட்டா் குடிநீா் வெள்ளம் போல் பீறிட்டு வெளியேறி வீணானது.

குடிநீா் குழாய் வெள்ளத்தில் புத்தாநத்தம் காவல்நிலையத்துக்கு மணப்பாறை - மதுரை சாலையில் காவல்காரன்பட்டியில் அமைக்கப்பட்டிருந்த வாகனச் சோதனை சாவடி முற்றிலுமாகச் சேதமடைந்தது. இதை மறுசீரமைக்க போலீஸாா் நடவடிக்கை மேற்கொள்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.