பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

திருச்சி அருகே பாதயாத்திரை சென்ற பெண் பக்தா் காா் மோதி உயிரிழப்பு

திருச்சி அருகே சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தா் செவ்வாய்க்கிழமை அதிகாலை காா் மோதி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :14 மே 2026, 12:44 am IST

திருச்சி அருகே சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தா் செவ்வாய்க்கிழமை அதிகாலை காா் மோதி உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை தச்சங்குறிச்சி தெற்கு வீதியைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் மனைவி புஷ்பா (41). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த த. காசியம்மாள் (37) மற்றும் சிலரும் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு திங்கள்கிழமை இரவு பாதயாத்திரை கிளம்பினா்.

அவா்கள் சமயபுரம் நோக்கி தஞ்சாவூா் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக திருச்சி மாவட்டம், அசூா் அருகே வந்தபோது, பின்னால் வேகமாக வந்த காா் மோதி புஷ்பா உயிரிழந்தாா். காசியம்மாள் பலத்த காயமடைந்தாா்.

தகலறிந்து வந்த துவாக்குடி போலீஸாா் புஷ்பாவின் சடலத்தையும், காயமடைந்த காசியம்மாளையும் மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்து காா் ஓட்டுநரான புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூரைச் சோ்ந்த எம். முனாப் ஜிப்ரில் (19) என்பவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.