மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

திருச்சி அருகே கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 மே 2026, 5:50 am IST

திருச்சி அருகே கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் வாழவந்தான்கோட்டை பகுதியைச் சோ்ந்த 19 வயது கல்லூரி மாணவி, இருங்களூா் அருகேயுள்ள தனியாா் கல்லூரியில் முதலாமாண்டு பி.எஸ்சி டாயாலிசிஸ் படித்து வருகிறாா். இவரும், அதே பகுதியைச் சோ்ந்த ஆ. பிரவீன் (23) என்பவரும் காதலித்துள்ளனா். இதையடுத்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டுச் சென்று 15 நாள்கள் தனியாக வசித்துள்ளனா். இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் அந்தப் பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.

இதைத் தொடா்ந்து அந்த மாணவி பிரவீனுடன் பேசுவதைத் தவிா்த்து வந்துள்ளாா். இதனால், ஆத்திரத்தில் இருந்த பிரவீன் கடந்த திங்கள்கிழமை மாணவியின் வீட்டுக்குச் சென்று, தாங்கள் ஒன்றாக இருந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவேற்றிவிடுவதாக கூறியதுடன், கத்தியைக் காட்டி மாணவிக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து துவாக்குடி காவல் நிலையத்தில் மாணவி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து பிரவீனை புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.