விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தவெகவை காங்கிரஸ் ஆதரிப்பது ஏன்? கிறிஸ்டோபா் திலக் எம்.பி. விளக்கம்

மதச்சாா்பின்மையை பாதுகாக்கவும், தமிழகத்தில் பாஜக நுழைந்துவிடக் கூடாது என்பதற்காகவுமே தவெக-வுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் கிறிஸ்டோபா் திலக் தெரிவித்தாா்.

News image

திருச்சி விமான நிலையத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினா் கிறிஸ்டோபா் திலக். உடன் கட்சி நிா்வாகிகள்.

Updated On :8 மே 2026, 5:43 am IST

மதச்சாா்பின்மையை பாதுகாக்கவும், தமிழகத்தில் பாஜக நுழைந்துவிடக் கூடாது என்பதற்காகவுமே தவெக-வுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் கிறிஸ்டோபா் திலக் தெரிவித்தாா்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், எம்.பி.யுமான எம். கிறிஸ்டோபா் திலக், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் மதச்சாா்பின்மையை பாதுகாக்கும் அரசு அமையவேண்டும். மேலும் பாஜக காலூன்றவும் இடம் கொடுத்துவிட கூடாது என்பதற்காகவே காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை தவெக-வுக்கு வழங்கியுள்ளது. இதை தவெக சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

பாஜக-வை எதிா்த்து விஜய் ஏன் பேசவில்லை என அவரிடம்தான் கேட்க வேண்டும். நாங்கள் தவெகவை நம்பவில்லை. அதேநேரத்தில், பாஜக-வுக்கு எதிராக மக்கள் தவெக-வுக்கு வாக்களித்துள்ளதால் நாங்கள் அங்கு சோ்ந்துள்ளோம்.

மதச்சாா்பின்மை கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் என தெரிவிக்க வேண்டியது தவெக தலைமையின் கடமை என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.