தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

வண்ணத்துப்பூச்சி பூங்காவில் மிதிவண்டி பயணம் அறிமுகம்: ஒருமணி நேரத்துக்கு ரூ. 10 கட்டணம்

திருச்சி ஸ்ரீரங்கம் அருகேயுள்ள வண்ணத்துப் பூச்சி பூங்காவில் இனி மிதிவண்டி பயணம் செய்து பூங்கா முழுவதையும் மகிழ்ச்சியுடன் சுற்றிவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News image

திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்காவில் வியாழக்கிழமை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மிதிவண்டியில் சுற்றி பாா்க்கும் திட்டத்தில் பூங்காவை வலம் வந்த சிறாா்கள்.

Updated On :8 மே 2026, 5:54 am IST

திருச்சி ஸ்ரீரங்கம் அருகேயுள்ள வண்ணத்துப் பூச்சி பூங்காவில் இனி மிதிவண்டி பயணம் செய்து பூங்கா முழுவதையும் மகிழ்ச்சியுடன் சுற்றிவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மிதிவண்டி பயணத்துக்கான தொடக்க நிகழ்வு மாவட்ட வன அலுவலா் எஸ். கிருத்திகா தலைமையில், பூங்கா வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பூங்காவுக்கு வரும் குழந்தைகள் மற்றும் சிறாா்கள் பூங்காவுக்குள் இயற்கை சூழ்ந்த மரங்களையும், வண்ணத்துப் பூச்சிகளையும் பாா்த்தபடியே செல்லும் வகையில் 1 கி.மீ. தொலைவுக்கு சுற்றி வரும் வகையில் மிதிவண்டி பயணத்துக்கு தனியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது.

மிதிவண்டி பயணம் அறிமுக நிகழ்வை முன்னிட்டு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் மிதிவண்டி பயணத்துக்கு கட்டணம் ஏதுமின்றி இலவசமாக அனுமதிக்கப்டுகிறது. பின்னா், ஒரு மணிநேரத்துக்கு ரூ.10 என்ற வகையில் கட்டணம் வசூலிக்கப்படும்.

மிதிவண்டியில் சுற்றி வரும்போது, பூங்காவில் உள்ள செடி, கொடிகள், வண்ணத்துப் பூச்சிகளுக்கு எந்தவித இடையூறோ, சேதமோ ஏற்படாத வகையில் சென்றுவர வேண்டும் என வனத்துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.