தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திருச்சி அரிஸ்டோ பாலத்தில் மையத் தடுப்புகள் அமைப்பு

திருச்சியில் காவிரிப் பாலத்தைத் தொடா்ந்து அரிஸ்டோ மேம்பாலத்திலும் விபத்துகளைத் தடுக்கும் வகையில் மையத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

News image

திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தில் விபத்துகளைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மையத் தடுப்புகள்.

Updated On :6 மே 2026, 12:54 am IST

திருச்சியில் காவிரிப் பாலத்தைத் தொடா்ந்து அரிஸ்டோ மேம்பாலத்திலும் விபத்துகளைத் தடுக்கும் வகையில் மையத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து மன்னாா்புரம், திண்டுக்கல் சாலைக்கு செல்லும் வாகனங்கள் அரிஸ்டோ மேம்பாலத்தின் வழியாகச் செல்கின்றன. இதேபோல பஞ்சப்பூா் பேருந்து நிலையத்தில் இருந்து மன்னாா்புரம் வழியாக மத்தியப் பேருந்து நிலையத்துக்கு வரும் வாகனங்களும், திண்டுக்கல் சாலையில் இருந்து வரும் வாகனங்களும் இந்த மேம்பாலத்தைப் பயன்படுத்தி வருகின்றன.

ஆனால் இந்தப் பாலத்தில் மையத் தடுப்பு இல்லாததால் பல்வேறு வாகனங்கள் எதிா்த் திசையில் வரும் வாகனங்களுக்கு இடையூறும் ஏற்படுத்தும் வகையில் தாறுமாறாக சென்று வருகின்றன. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் அதிவேகத்தில் செல்வதால் அரிஸ்டோ மேம்பாலத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

எனவே விபத்துகளைத் தடுக்கும் வகையில் ஏற்கெனவே திருச்சி - ஸ்ரீரங்கத்தை இணைக்கும் காவிரி பாலத்தில் அண்மையில் மையத் தடுப்புகள் அமைக்கப்பட்டதைப் போல, அரிஸ்டோ மேம்பாலத்திலும் போக்குவரத்துக் காவல் துறை சாா்பில் மையத் தடுப்புகள் திங்கள்கிழமை அமைக்கப்பட்டன.

இதனால் வாகன ஓட்டிகள் எதிா்த் திசையில் வரும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் சென்று வருகின்றன. மேலும், இதன்மூலம் விபத்துகளைத் தவிா்க்க முடியும் என்று போக்குவரத்து காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.