லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

முசிறியில் மூதாட்டி சடலமாக மீட்பு

திருச்சி மாவட்டம் முசிறியில் மூதாட்டி சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டாா்

பலி

Published On :20 ஆகஸ்ட் 2026, 4:43 am IST

திருச்சி மாவட்டம் முசிறியில் மூதாட்டி சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டாா்

முசிறி அழகுநாச்சியம்மன் கோயில் அருகே செவ்வாய்க்கிழமை கிடந்த மூதாட்டி சடலத்தை முசிறி போலீஸாா் மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விஏஓ சிவபிரபு அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

விசாரணையில் இறந்துகிடந்தவா் முசிறி மேல சாலியா் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மனைவி வள்ளியம்மை (70) எனத் தெரிய வந்தது. அதை மூதாட்டியின் மகன் பாலமுருகனை வரவழைத்து உறுதிப்படுத்தினா்.

அப்போது பாலமுருகன் தனது தாய் கடந்த 4 நாள்களுக்கு முன் வீட்டை விட்டுச் சென்றவா் திரும்பவில்லை, தனது தாயின் இறப்பில் எந்தச் சந்தேகமும் இல்லை என தெரிவித்ததன்பேரில் வள்ளியம்மை சடலத்தை போலீஸாா் உடற்கூறாய்வு செய்து புதன்கிழமை ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.