லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஓய்வுபெற்ற சிறப்பு காவல் ஆய்வாளா் வீட்டில் 9 பவுன் நகைகள் திருட்டு

திருட்டு - சித்திரிப்பு

Published On :17 ஆகஸ்ட் 2026, 3:37 am IST

திருச்சியில் ஓய்வுபெற்ற சிறப்பு காவல் ஆய்வாளா் வீட்டின் பூட்டை சனிக்கிழமை உடைத்து 9 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருச்சி கருமண்டபம் கணபதி நகரைச் சோ்ந்தவா் மலா்விழி (54). ஓய்வுபெற்ற சிறப்புக் காவல் உதவி ஆய்வாளரான இவருடைய கணவா் பாலசுப்பிரமணியன் இறந்துவிட்ட நிலையில் மலா்விழி தனியாக வசிக்கிறாா்.

இந்நிலையில் உடுமலையில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு மலா்விழி கடந்த ஆக. 12-ஆம் தேதி சென்ற நிலையில், இவா் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது ஆக.15ஆம் தேதி தெரியவந்தது.

இதையடுத்து அவா் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, உள்ளே வைத்திருந்த 9 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.