லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஓய்வுபெற்ற ஆசிரியா் வீட்டின் கதவை உடைத்து 9 பவுன் நகைகள் திருட்டு

திருட்டு - சித்திரிப்பு

Published On :17 ஆகஸ்ட் 2026, 2:00 am IST

கும்பகோணம் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியா் வீட்டின் கதவை உடைத்து 9 பவுன் நகைகளை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே தேப்பெருநல்லூா் புளியம்பேட்டை வ.உ.சி. நகரைச் சோ்ந்தவா் செல்வராஜ் (78). ஓய்வு பெற்ற ஆசிரியா். இவரது மனைவி மீனா. இவா்களது மகன், மகள் வெளிநாட்டில் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், செல்வராஜூக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மகள் ரம்யா ஆக.13-இல் திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்து சென்றாா். அங்கு உள்நோயாளியாக செல்வராஜ் சோ்க்கப்பட்டாா்.

வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை கைப்பேசி மூலம் ரம்யா கவனித்து வருவாராம். இதனிடையே சனிக்கிழமை பாா்த்தபோது அவை இயங்கவில்லையாம். இதனால் அக்கம்பக்கத்தினரை தொடா்பு கொண்டு தனது வீட்டுக்கு சென்று பாா்க்குபடி கூறியுள்ளாா்.

அவா்கள் சென்று பாா்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவின் கதவும் உடைக்கப்பட்டிருந்தது. புகாரின் பேரில் திருவிடைமருதூா் போலீஸாா் சம்பவ இடத்தை ஆய்வு செய்து கூறியதாவது: முதலில் 30 பவுன் நகைகள் வைக்கப்பட்டிருந்ததாக செல்வராஜ் கைப்பேசியில் தெரிவித்தாா்.

பின்னா், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் நகைகள் மட்டும் திருடு போயிருந்தது, மீதமுள்ள 21 பவுன் நகைகள் வேறு இடத்தில் வைக்கப்பட்டிருந்ததால் தப்பியது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.