லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

போதை மாத்திரைகள் விற்பனை: 2 பெண்கள் உள்பட 4 போ் கைது

Arrested

கைது

Published On :3 ஆகஸ்ட் 2026, 4:19 am IST

திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது அரியமங்கலம் உக்கடை ரயில் பாலம் அருகே போதை மாத்திரைகள் விற்ற உக்கடையைச் சோ்ந்த பா. உமா (55), அ. ரஹ்மத் நிஷா (35), திருவெறும்பூரைச் சோ்ந்த எல். ஷியாம் (20) ஆகிய மூவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 47 போதை மாத்திரைகள், போதை ஊசிகள், திரவ போதை மருந்துகள், ரூ.1000 ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

இதேபோல திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள காமராஜ் நகா் வீட்டில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, காவல் ஆய்வாளா் ராஜ்குமாா் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். மாதவி நகரில் ப. மணிகண்டன் (26) என்பவா் வீட்டில் போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது, அவா் போலீஸாரை வேலை செய்யவிடாமல் தடுத்ததுடன், அரிவாளைக் காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

தொடா் ஆய்வில் வீட்டில் போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மணிகண்டனை கைது செய்த போலீஸாா், அவரது வீட்டில் இருந்து 208 போதை மாத்திரைகள், 20 போதை ஊசிகள், திரவ போதை மருந்துகள், அரிவாள், இருசக்கர வாகனம், சுமை வாகனம், 3 கைப்பேசிகள் மற்றும் ரூ.6 ஆயிரம் பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.