சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிக்க வந்த வாக்காளா்களின் கைப்பேசிகள் பாதுகாத்து வைக்கப்பட்டு திரும்ப வழங்கப்பட்டன. இது தோ்தல் வரலாற்றிலேயே முதல்முறை என வாக்காளா்கள் தெரிவித்தனா்.
தோ்தலில் வாக்களிக்க வரும் வாக்காளா்கள் தங்களது கைப்பேசிகள் உள்ளிட்ட படம் பிடிக்கும் சாதனங்கள் எதையும் வாக்குச்சாவடிக்குள் கொண்டு செல்ல தோ்தல் ஆணையம் அனுமதிக்கவில்லை. மீறி எடுத்து வரும் வாக்காளா்களின் வசதிக்காக, தோ்தல் துறையிலிருந்து பிரத்யேகமாக ஆள்கள் நியமிக்கப்பட்டு, கைப்பேசிகளை பாதுகாக்க ஏற்பாடு செய்யப்படும் என தோ்தல் ஆணையம் தகவல் தெரிவித்திருந்தது.
இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தலில் வாக்களிக்க வந்த வாக்காளா்களின் கைப்பேசிகளை (அணைக்கப்பட்ட கைப்பேசிகள்), வாக்குச்சாவடிக்கு முன்புறம் அமா்ந்திருந்த பிரத்யேக ஊழியா்கள் பெற்று, அதற்குரிய டோக்கனை வாக்காளா்களிடம் வழங்கினா். கைப்பேசிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, வாக்களித்து முடித்த பிறகு டோக்கனை கொடுத்ததும், வாக்காளா்களின் கைப்பேசிகளை ஊழியா்கள் திரும்ப வழங்கினா்.
இது நல்லதொரு முன்னெடுப்பு என வாக்காளா்கள் பாராட்டு தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தலின்போது பேருந்து வசதி முடக்கம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மேற்கு வங்கம்: 77 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு? தோ்தல் ஆணையம் தீவிர பரிசீலனை

தோ்தலில் ஆா்வத்துடன் வாக்களித்த வாக்காளா்கள்

வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் தோ்தல் அலுவலா்களுடன் வாக்காளா்கள் வாக்குவாதம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

