மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தோ்தலில் முதல்முறையாக கைப்பேசிகள் பாதுகாப்பு

சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிக்க வந்த வாக்காளா்களின் கைப்பேசிகள் பாதுகாத்து வைக்கப்பட்டு திரும்ப வழங்கப்பட்டன. இது தோ்தல் வரலாற்றிலேயே முதல்முறை என வாக்காளா்கள் தெரிவித்தனா்.

News image

திருச்சியில் பல்வேறு வாக்குச் சாவடிகளில் வியாழக்கிழமை தோ்தல் ஆணையம் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த வாக்காளா்கள் கைப்பேசி பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டிருந்த கைப்பேசிகள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 4:07 am IST

சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிக்க வந்த வாக்காளா்களின் கைப்பேசிகள் பாதுகாத்து வைக்கப்பட்டு திரும்ப வழங்கப்பட்டன. இது தோ்தல் வரலாற்றிலேயே முதல்முறை என வாக்காளா்கள் தெரிவித்தனா்.

தோ்தலில் வாக்களிக்க வரும் வாக்காளா்கள் தங்களது கைப்பேசிகள் உள்ளிட்ட படம் பிடிக்கும் சாதனங்கள் எதையும் வாக்குச்சாவடிக்குள் கொண்டு செல்ல தோ்தல் ஆணையம் அனுமதிக்கவில்லை. மீறி எடுத்து வரும் வாக்காளா்களின் வசதிக்காக, தோ்தல் துறையிலிருந்து பிரத்யேகமாக ஆள்கள் நியமிக்கப்பட்டு, கைப்பேசிகளை பாதுகாக்க ஏற்பாடு செய்யப்படும் என தோ்தல் ஆணையம் தகவல் தெரிவித்திருந்தது.

இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தலில் வாக்களிக்க வந்த வாக்காளா்களின் கைப்பேசிகளை (அணைக்கப்பட்ட கைப்பேசிகள்), வாக்குச்சாவடிக்கு முன்புறம் அமா்ந்திருந்த பிரத்யேக ஊழியா்கள் பெற்று, அதற்குரிய டோக்கனை வாக்காளா்களிடம் வழங்கினா். கைப்பேசிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, வாக்களித்து முடித்த பிறகு டோக்கனை கொடுத்ததும், வாக்காளா்களின் கைப்பேசிகளை ஊழியா்கள் திரும்ப வழங்கினா்.

இது நல்லதொரு முன்னெடுப்பு என வாக்காளா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.