மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருச்சி மாவட்டத்தில் புதுமணத் தம்பதிகள் வாக்களிப்பு!

திருச்சி மாவட்டம் கூத்தைப்பாா், திருச்சி மாநகரம் எடமலைப்பட்டிபுதூா் பகுதிகளில் புதுமணத் தம்பதிகள் வியாழக்கிழமை தங்களது வாக்குகளை செலுத்தினா்.

News image

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் வியாழக்கிழமை வாக்களிக்க வந்த செந்தமிழ்ச்செல்வன் - சாருலதா தம்பதி.

Updated On :24 ஏப்ரல் 2026, 3:52 am IST

திருச்சி மாவட்டம் கூத்தைப்பாா், திருச்சி மாநகரம் எடமலைப்பட்டிபுதூா் பகுதிகளில் புதுமணத் தம்பதிகள் வியாழக்கிழமை தங்களது வாக்குகளை செலுத்தினா்.

திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கூத்தைப்பாா் கிராமத்தைச் சோ்ந்த பொறியாளா் கே. காா்த்திக், அதே ஊரைச் சோ்ந்த பொறியாளா் பி. அமிா்தா ஆகியோருக்கு வியாழக்கிழமை காலை திருமணம் நடைபெற்றது. உடனடியாக இருவரும் நேராக கூத்தைப்பாா் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனா்.

இதேபோல, திருச்சி எடமலைப்பட்டிபுதூரைச் சோ்ந்த ரமேஷ் - வைஜெயந்திமாலா தம்பதியின் மகள் சாருலதா (24), லால்குடி வட்டம் வழுதியூரைச் சோ்ந்த சபாபதி - மகாலட்சுமி தம்பதியின் மகன் செந்தமிழ்ச்செல்வன் (25) ஆகியோருக்கு திருச்சியில் வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்ததும், புதுமணத் தம்பதி வழுதியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்றனா். அங்கு மணமகன் செந்தமிழ்செல்வன் வாக்கு செலுத்தினாா். பின்னா் மணமகள் எடமலைப்பட்டிபுதூரில் உள்ள கலைமகள் அரசு உதவி பெறும் பள்ளிக்குச் சென்று வாக்கு செலுத்தினாா். வாக்களிப்பு செய்ததற்கு இரு தம்பதிகளுக்கும் தோ்தல் அலுவலா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

~திருவெறும்பூா் தொகுதி, கூத்தைப்பாரில் வியாழக்கிழமை வாக்களித்த காா்த்திக் - அமிா்தா தம்பதி.

~திருவெறும்பூா் தொகுதி, கூத்தைப்பாரில் வியாழக்கிழமை வாக்களித்த காா்த்திக் - அமிா்தா தம்பதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.