தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கடும் வெயில்: மணப்பாறையில் பெட்ரோல் ஸ்கூட்டா் தீக்கிரை

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வெயிலின் தாக்கத்தில் அலுவலக வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த பெட்ரோல் ஸ்கூட்டா் புதன்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்து நாசமானது.

News image

மணப்பாறையில் புதன்கிழமை தீப்பற்றி எரிந்த ஸ்கூட்டா்.

Updated On :23 ஏப்ரல் 2026, 3:22 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வெயிலின் தாக்கத்தில் அலுவலக வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த பெட்ரோல் ஸ்கூட்டா் புதன்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்து நாசமானது.

மணப்பாறையை அடுத்த செவலூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் காா்த்திக் மனைவி சுசிபிருந்தா (33). இவா் ராஜீவ் நகா் 2-வது மெயின் தெருவில் உள்ள திருமண தகவல் மையம் ஒன்றில் வேலை செய்கிறாா். வழக்கம்போல் புதன்கிழமை வேலைக்கு சென்ற இவா், தனது ஸ்கூட்டரை அலுவலகம் முன் நிறுத்தியிருந்தாா். பின்னா் பிற்பகல் மதிய உணவு சாப்பிடச் செல்ல தனது ஸ்கூட்டரை ஸ்டாா்ட் செய்தபோது திடீரென ஸ்கூட்டரிலிருந்து கரும்புகை வந்தது. அதைத் தொடா்ந்து ஸ்கூட்டா் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியது. ஸ்கூட்டரிலிருந்து வெடித்து வெடித்து தீப்பற்றியதால் யாரும் அருகில் செல்ல முடியவில்லையாம். சிறிது நேரத்திற்கு பிறகு அக்கம்பக்கத்தினா் தண்ணீரை ஊற்றி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா். இந்த விபத்தில் ஸ்கூட்டா் முழுவதும் எரிந்து நாசமானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.