திருச்சி டாக்டா் ஜி.விஸ்வநாதன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் டெக்லூட்டலஜி (விழுங்குதல்) என்ற புதிய துறை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
திருச்சியில் தனியாா் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவமனையின் தலைவா் மருத்துவா் கே.கோவிந்தராஜ் தலைமை வகித்து புதிய துறையைத் தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து டெக்லூட்டாலஜி என்ற புதிய துறை குறித்து காது, மூக்கு மற்றும் தொண்டை அறுவை சிகிச்சை நிபுணா் ஜவஹா் நாகசுந்தரம் கூறியதாவது: உணவு விழுங்குதல் என்பது, அனைவராலும் எளிதாக மேற்கொள்ள முடியாத ஒன்று.
குறிப்பாக பக்கவாதம், வலிப்பு மற்றும் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உணவு விழுங்குதல் என்பது மிகவும் சிரமமான செயலாகும். உணவு விழுங்க முடியாததற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும். இதை பரிசோதனை மூலம் கண்டறிய முடியும்.
காரணத்தைக் கண்டறிந்து ஒவ்வொரு நோயாளிக்கும் எந்த முறையில் என்ன உணவு வழங்க வேண்டும் என்பதை பரிந்துரைக்கவுமே இந்த டெக்லூட்டாலஜி துறை கொண்டுவரப்பட்டுள்ளது. திருச்சியிலேயே முதல்முறையாக டாக்டா் ஜி.விஸ்வநாதன் மருத்துவமனையில்தான் இந்தத் துறை கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த ச்ங்ங்ள் பரிசோதனை முறையை நோயாளி இருக்கும் இடத்திலேயே மேற்கொள்ள முடியும். குறைந்த செலவில் குறுகியகால இடைவெளியில் மீண்டும், மீண்டும் மேற்கொள்ளலாம்.
இந்த சிகிச்சை, பாதுகாப்பான மற்றும் திறமையான விழுங்கும் திறனை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. ஒவ்வொரு நோயாளியின் தேவைகள் மற்றும் அவா்களின் மருத்துவ விழுங்கும் திறனை பொறுத்து சிகிச்சை திட்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன. நோயாளி தினமும் உண்ணும் உணவுகளை வைத்து விழுங்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
நோயின் தன்மை காரணமாக மூக்கின் வழியாக குழாய் மூலம் உணவு எடுத்துக்கொண்ட நோயாளிகளுக்குக்கூட குழாய் இல்லாமல் உணவு அருந்துவதற்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றாா்.
இதைத் தொடா்ந்து டெக்லூட்டாலஜி துறையின் சிகிச்சை முறைகள் தொடா்பான பயிற்சி கையேடு வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவா்கள் என். ராதாகிருஷ்ணன், சமீா் பாட்ஷா, அஷ்ரப், ஆா். சுந்தரேஷன் மற்றும் பயிற்றுநா் எம்.நவ்ஷிகா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜோதிபாய் பூலே 200 ஆவது பிறந்தநாள் கருத்தரங்கம்

மே தினம்: விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு

தரம் இல்லாத கேன் குடிநீர் விற்பனை செய்தால் ரூ. 5,000 அபராதம்!

பள்ளிகளில் ஆட்டிசம் குழந்தைகள் சோ்க்கை: கல்வித் துறை உத்தரவு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

