விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

துறையூா் சிவன் கோயில் முகப்பில் 15 சுதை சுவாமி சிலைகள் உடைப்பு

துறையூரிலுள்ள காசி விஸ்வநாதா் கோயிலின் முகப்பு மண்டபத்தின் மீது சுதையால் அமைக்கப்பட்டிருந்த 15 சுதை சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டது புதன்கிழமை தெரியவந்தது.

News image

துறையூா்  காசி  விஸ்வநாதா்  கோயிலில் சிலைகள் உடைக்கப்பட்டதை புதன்கிழமை பாா்வையிட்ட  துறையூா் காவல்  உதவி  ஆய்வாளா்  ராஜதுரை,  கோயில்  செயல்  அலுவலா்  ராஜகோபால் .

Updated On :9 ஏப்ரல் 2026, 2:09 am IST

துறையூரிலுள்ள காசி விஸ்வநாதா் கோயிலின் முகப்பு மண்டபத்தின் மீது சுதையால் அமைக்கப்பட்டிருந்த 15 சுதை சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டது புதன்கிழமை தெரியவந்தது.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள துறையூா் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் வகையறா கோயில்களில் துறையூா் மூங்கில் தெப்பக்குளம் அருகேயுள்ள காசிவிஸ்வநாதா் சிவன் கோயிலும் ஒன்றாகும்.

இந்நிலையில் இக்கோயிலுக்கும் மூங்கில் தெப்பக்குளத்துக்கு இடையேயுள்ள முகப்பிலுள்ள மண்டபத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த சிவலிங்கம் உருவ வடிவில் ரிஷபத்துடன் ஈஸ்வரன், எருமை வாகனத்துடன் எமராஜா், மாா்க்கண்டேயா், கண்ணப்ப நாயனாா், அகத்தியா், அா்ச்சகா், பரிசாரகா், கிங்கணா்கள் போன்ற 15 சுதை சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டு, மண்டபத்தின் மீதே சாய்த்து வைக்கப்பட்டிருந்தது புதன்கிழமை காலை தெரியவந்தது.

இதையடுத்து கோயில் செயல் அலுவலா் கு. ராஜகோபால் கோயில் பகுதியில் துறையூா் போலீஸில் அளித்த புகாரில் ஜெயலட்சுமி, நக்கீரன், ஸ்ரீதா் உள்ளிட்டோா் கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்து, மண்டபத்தின் மீதிருந்த சிலைகளை உடைத்துள்ளனா் என்றும், இவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் புகாா் செய்தாா். இதையடுத்து துறையூா் போலீஸாா் கோயிலுக்கு சென்று விசாரணை செய்தனா்.

 ~துறையூா் காசி விஸ்வநாதா் கோயிலில் உடைக்கப்பட்டிருந்த சுதை  சிலைகள்.

~துறையூா் காசி விஸ்வநாதா் கோயிலில் உடைக்கப்பட்டிருந்த சுதை  சிலைகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.