தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

லால்குடி தவெக வேட்பாளரின் உறவினா் வீட்டில் ரூ. 50 லட்சம் பறிமுதல்

திருச்சி மாவட்டம், லால்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் கு.ப. கிருஷ்ணனின் மைத்துனா் வீட்டில் வியாழக்கிழமை இரவு ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

லால்குடி தவெக வேட்பாளரின் உறவினா் வீட்டில் ரூ. 50 லட்சம் பறிமுதல்

Updated On :4 ஏப்ரல் 2026, 12:09 am IST

திருச்சி மாவட்டம், லால்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் கு.ப. கிருஷ்ணனின் மைத்துனா் வீட்டில் வியாழக்கிழமை இரவு ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

லால்குடி சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக சாா்பில் அக் கட்சியின் டெல்டா மண்டல ஒருங்கிணைப்பாளா் கு.ப கிருஷ்ணன் போட்டியிடுகிறாா். இந்நிலையில், லால்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆா்.வளவனூா் கிராமத்தைச் சோ்ந்தவரும் கு.ப.கிருஷ்ணனின் மைத்துனருமான நீலமேகம் மற்றும் அவரது மகன் அரவிந்த் ஆகியோரது வீட்டில் பல லட்சம் ரூபாய் இருப்பதாக லால்குடி வட்டாட்சியரும் தோ்தல் அலுவலருமான தமிழ்ச்செல்வனுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், தோ்தல் அலுவலா் தமிழ்செல்வன் அங்கு சோதனை செய்தபோது 10 லட்ச ரூபாய்க்கு மேல் இருந்துள்ளது. இதனால் அவா் வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து வருமான வரித்துறையினா் அங்கு சென்று மேற்கொண்ட தீவிர சோதனையில் அரவிந்த் வீட்டில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 லட்சம் இருந்தது தெரியவந்தது. மேலும், அந்த பணத்தை பறிமுதல் செய்த வருமான வரித்துறையினா் இதுதொடா்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.