கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வீட்டின் கதவை உடைத்து திருடிய 3 போ் கைது

கும்பகோணம் அருகே வீட்டின் கதவை உடைத்து திருடிய 3 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 மே 2026, 4:56 am IST

கும்பகோணம் அருகே வீட்டின் கதவை உடைத்து திருடிய 3 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் அருகே ஆடுதுறை பகுதி திருமங்கலக்குடி செட்டித் தெருவில் இரண்டு வீடுகளில் மே 16-ஆம் தேதி கதவு உடைக்கப்பட்டு திருட்டு போயிருந்தது. தகவலறிந்த திருவிடைமருதூா் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்கு சென்று, அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தைக் கைப்பற்றி, அதிலுள்ள பதிவு எண்ணை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டனா்.

இதில், சென்னை எண்ணூா் பெரியகுப்பத்தைச் சோ்ந்த முகமது ரபி மகன் கனி (19), மாதவரம் கொல்லம் தோட்டம் செந்தில் மகன் பாலகிருஷ்ணன் (20), ஆந்திர மாநிலம் காரூா் கிராமம் காா்த்தி (24) ஆகியோா் சென்னையிலிருந்து இருசக்கர வாகனத்தில் திருவிடைமருதூருக்கு வந்ததும், ஆடுதுறை அருகே திருமங்கலக்குடியில் பூட்டப்பட்டிருந்த பாத்திமா வீட்டில் கதவை உடைத்து திருட முயன்றதும், ஆனால் அங்கு பொருள்கள் எதுவும் இல்லாததால், அடுத்துள்ள சுல்தானா வீட்டில் வெள்ளிக்கொலுசை திருடிச் சென்றதும், ஆள்கள் நடமாட்டம் இருந்ததால், இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு தப்பி சென்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து, 3 பேரையும் திருவிடைமருதூா் காவல் நிலையத்தினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.