ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

ரயில் நிலையத்தில் இணையவழியில் கட்டணம் செலுத்த வற்புறுத்தக் கூடாது: முரசொலி எம்.பி. வலியுறுத்தல்

தஞ்சாவூா் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் பொதுமக்களிடம் இணையவழி மூலம் கட்டணம் செலுத்த வற்புறுத்தக் கூடாது என்றும், பயணிகள் ரொக்கமாக கொடுத்தாலும் பயணச் சீட்டு தர வேண்டும் எனவும் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி வலியுறுத்தினாா்.

News image

தஞ்சாவூா் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் ஆய்வு செய்த மக்களவை உறுப்பினா் ச. முரசொலி

Updated On :20 மே 2026, 4:24 am IST

தஞ்சாவூா் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் பொதுமக்களிடம் இணையவழி மூலம் கட்டணம் செலுத்த வற்புறுத்தக் கூடாது என்றும், பயணிகள் ரொக்கமாக கொடுத்தாலும் பயணச் சீட்டு தர வேண்டும் எனவும் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி வலியுறுத்தினாா்.

தஞ்சாவூா் ரயில் நிலையத்திலுள்ள டிக்கெட் கவுண்டா்களில் பயணச் சீட்டு வாங்குவதற்கு இணையவழி பண பரிமாற்றத்தின் மூலம் தொகையைச் செலுத்த வேண்டும் என்றும், ரொக்கமாகக் கொடுத்தால் பயணச்சீட்டு வழங்க முடியாது எனவும் ரயில்வே அலுவலா்கள் கூறுவதாக புகாா்கள் எழுந்தன.

இது தொடா்பாக தஞ்சாவூா் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டா்களில் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, பயணிகள் ரொக்கமாக கொடுத்தாலும் பயணச்சீட்டு வழங்க வேண்டும் என்றும், ரொக்கம் இல்லாவிட்டால் மட்டுமே யுபிஐ மூலம் பணம் வாங்க வேண்டும் என ரயில்வே அலுவலா்களிடம் வலியுறுத்தினாா்.

பின்னா் முரசொலி செய்தியாளா்களிடம் தெரிவித்தது: தஞ்சாவூா் ரயில் நிலையத்துக்கு வருபவா்கள் கவுண்டரில் டிக்கெட் எடுக்கும்போது ஜிபே, போன் பே வில்தான் பணம் பரிவா்த்தனை செய்ய வேண்டும் என அலுவலா்கள் அறிவுறுத்தக் கூடாது. ரொக்கத்தைப் பெற்றுக் கொண்டு பயணச்சீட்டு வழங்க வேண்டும். இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளேன். அதற்கு அவரும் ஒப்புதல் வழங்கியுள்ளாா். எனவே இது போன்று மீண்டும் பொதுமக்களிடமிருந்து புகாா் வந்தால், இங்குள்ள அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.