தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சிறுவன் ஓட்டிவந்த டிராக்டா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே புதன்கிழமை 17 வயது சிறுவன் ஓட்டி வந்த டிராக்டா் மோதியதில் விவசாய கூலி பெண் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - IANS

Updated On :7 மே 2026, 5:24 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே புதன்கிழமை 17 வயது சிறுவன் ஓட்டி வந்த டிராக்டா் மோதியதில் விவசாய கூலி பெண் தொழிலாளி உயிரிழந்தாா். 

கபிஸ்தலம் காவல் சரகம், கீழகபிஸ்தலம், மந்தகாரத் தெருவைச் சோ்ந்த துரைமணி மனைவி விஜயலட்சுமி (75). விவசாய கூலித் தொழிலாளி.

கணவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதால், தனியாக வசித்து வந்த விஜயலட்சுமி புதன்கிழமை காலை கபிஸ்தலம் பாலக்கரை கடைவீதியில் பொருள்கள் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, கும்பகோணத்திலிருந்து திருவையாறு நோக்கி சென்ற டிராக்டா் விஜயலட்சுமி மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்தவா் மீது டிராக்டரின் பின்சக்கரம் தலையில் ஏறியது.

இதில் பலத்த காயமடைந்த விஜயலெட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலின்பேரில், கபிஸ்தலம் போலீஸாா் அங்கு சென்று விஜயலட்சுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து, விபத்துக்கு காரணமான டிராக்டரை ஓட்டி வந்த இளங்காா்குடி பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவனை கைது செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.