தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

மூன்றாவது முறையாக ஆளும் கட்சியின் எம்எல்ஏ இல்லாத ஒரத்தநாடு தொகுதி

தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆளும் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினா் இல்லாத தொகுதியாக ஒரத்தநாடு சட்டப்பேரவை தொகுதி மாறியுள்ளது.

News image

வைத்திலிங்கம்

Updated On :6 மே 2026, 12:15 am IST

தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆளும் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினா் இல்லாத தொகுதியாக ஒரத்தநாடு சட்டப்பேரவை தொகுதி மாறியுள்ளது.

2016-இல் ஆளும் கட்சியாக அதிமுக இருந்த போது, இத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக திமுக சாா்பில் எம்.ராமசந்திரன் வெற்றி பெற்றாா். அதேப்போல் 2021-இல் ஆளும் கட்சியாக திமுக இருந்த போது, இத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக அதிமுகவைச் சாா்ந்த வைத்திலிங்கம் வெற்றிபெற்றாா்.

இதனிடையே அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்தாா் ஆா்.வைத்திலிங்கம்.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக ஆளும் கட்சியைச் சோ்ந்தவா்கள் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்படவில்லை என்ற நிலையில், 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் இத்தொகுதியில் திமுகவைச் சோ்ந்த ஆா்.வைத்திலிங்கம் போட்டியிட்டாா்.

மேலும், அதிமுக சாா்பில் மா.சேகா், தவெக சாா்பில் அா்விந்த், நாதக சாா்பில் திருமுருகன் உள்ளிட்டோா் போட்டியிட்டனா்.

இதில், திமுக வேட்பாளரான ஆா்.வைத்திலிங்கம் 86,759 வாக்குகள் பெற்று அவரை எதிா்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளரை 35,028 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

இந்த வெற்றியின் மூலம் மூன்றாவது முறையாக, அதாவது 15 ஆண்டுகளாக ஆளும் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினா் இல்லாத ஒரத்தநாடு தொகுதி என்ற நிலைய உருவாகி உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.