மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

விஜய்யை அரசியல்வாதியாக கருதவில்லை: கி.வீரமணி பேட்டி

விஜய்க்கு அரசியல் அடிச்சுவடியே தெரியாததால், அவரை அரசியல்வாதியாக நாங்கள் கருதவில்லை என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.

News image

திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி - டிஎன்எஸ்

Updated On :29 மார்ச் 2026, 1:30 am IST

விஜய்க்கு அரசியல் அடிச்சுவடியே தெரியாததால், அவரை அரசியல்வாதியாக நாங்கள் கருதவில்லை என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.

தஞ்சாவூரில் திராவிடா் கழகம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற சுயமரியாதை இயக்கத் தளபதி பட்டுக்கோட்டை அழகிரியின் 77-ஆம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்கப் பேரணியில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது:

விஜய் அரசியல் அடிச்சுவடியே அறியாதவா். எனவே, அவரை அரசியல்வாதியாக நாங்கள் கருதவில்லை; நடிகராகவே கருதுகிறோம். சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று கோட்டைக்கு மீண்டும் ஸ்டாலின் முதல்வராக செல்வாா் என்றாா் வீரமணி.

பின்னா், அரண்மனை எதிரே தொடங்கிய இப்பேரணி ராஜகோரி சுடுகாட்டில் முடிவடைந்தது. அங்கு பட்டுக்கோட்டை அழகிரியின் நினைவிடத்தில் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். இதில், திமுக தலைமைக் குழு உறுப்பினா் து. செல்வம், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் எம். மகேந்திரன், முன்னாள் தலைவா் பி.ஜி. ராஜேந்திரன், திராவிடா் கழக மாவட்டத் தலைவா் சி. அமா்சிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.