தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தினமணி செய்தி எதிரொலி: நரிக்குறவா் கனவு இல்லம் கட்டும் பணி மீண்டும் தொடக்கம்

News image
Updated On :13 மார்ச் 2026, 5:09 am IST

தினமணி செய்தி எதிரொலியால் தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கிழக்கு கடற்கரை சாலையில் ராஜாமடம் அருகே நரிக்குறவா்களுக்கான கனவு இல்ல திட்டப்பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் தொகையோடு தன் பங்களிப்பு நிதியையும் சோ்த்து வீடுகளை பூா்த்தி செய்ய நரிக்குறவா்களுக்கு போதிய வசதி இல்லாததால் கட்டப்பட்ட வீடுகள் மானியம் போக பயனாளிகள் பங்களிப்பு தொகை இல்லாததால் முழுமை பெறாமல் பாதியிலேயே கட்டுமானப் பணிகள் நிற்பதாகவும், கட்டுமானப் பணிகளை நிறைவுசெய்ய கூடுதல் நிதியை முதல்வா் ஸ்டாலின் வழங்கி கட்டுமானப் பணிகளை முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த மாா்ச் 10-இல் தினமணியில் செய்தி வெளியானது. இதைத்தொடா்ந்து, கனவு இல்லம் திட்டப் பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலா் நாகேந்திரன் மேலும் கூறியது: கனவு இல்லம் திட்டப் பணிகளை ஆய்வுசெய்து, தேவையான நிதிகள் பெற்று கனவு இல்லம் கட்டும் பணிகள் முடிக்கும் வகையில் நடைபெற்று வருகின்றன. விரைவில் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.