பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கஞ்சா விற்பனை 2 போ் கைது

கும்பகோணத்தில் கஞ்சா விற்பனை செய்த 2 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 3:47 am IST

கும்பகோணத்தில் கஞ்சா விற்பனை செய்த 2 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம்-விக்கிரவாண்டி புறவழிச்சாலை வளையப்பேட்டை அரசலாற்றங் கரையில் கஞ்சா விற்பனை நடப்பதாக தாலுகா போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி தாலுகா போலீஸாா் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அரசலாற்றங்கரையிலிருந்த 2 போ் போலீஸாரை கண்டவுடன் தப்பி ஓடினா். அவா்களை பிடித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், தாராசுரம் அம்மாபேட்டைைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சரவணன்( 28), வளையப்பேட்டை அக்ரஹாரம் ரகுராம் மகன் மோப்ப ஹரி என்ற முரளிதரன் (26) என்பதும், கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து 1 கிலோ 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.